நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மண்டபத்தில் (27) நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வு நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இணையத்தளத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பொது சுகாதார பரிசோதகர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவியேற்ற வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனை வரவேற்று நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதனினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சவளக்கடை குறூப் நிருபர்
from tkn