அவுஸ்திரேலிய விஞ்ஞானிகளால் கொரோனா வைரஸ் பிரதியெடுப்பு

அவுஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சீனாவுக்கு வெளியே முதன்முறையாகக் கொரோனா வகை வைரஸை தங்கள் ஆய்வுக்காக வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

அதைக்கொண்டு பரவி வரும் வைரஸுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கிவிடமுடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

மெல்பர்னின் பீட்டர் டோஹெர்டி கல்விக் கழக ஆராய்ச்சியாளர்கள், பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரிடமிருந்து வைரஸ் வகையைப் பெற்றனர்.

ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ், தடுப்பு மருந்தை உருவாக்கவும் துல்லியமான வகையில் முன்கூட்டியே அதைக் கண்டறியவும் கைகொடுக்கும்.

அத்துடன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தும் அதன் அறிகுறிகளை வெளிப்படுத்தாத நபர்களிடம் முன்கூட்டியே அதைக் கண்டறிவதற்கான முயற்சியிலும் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.

ஐரோப்பாவில் உள்ள உலகச் சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகளுடன் ஆராய்ச்சியின் முடிவுகளைப் பகிர்ந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இதர பகுதிகளில் உள்ள ஆய்வுகூடங்களிலும் அவை பகிர்ந்துகொள்ளப்படும்.

Thu, 01/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை