இரு வாகனங்களில் மோதிய லொறி; பெண் பலி

நால்வர் காயம்

நாரம்மல – குருணாகலை வீதியில் கனேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் காயமடைந்துள்ளனர்.

சியம்லாகஸ்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருணாகலை திசை நோக்கிப் பயணித்த லொறியானது, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பஸ் வண்டியைக் கடந்து செல்ல முயன்றபோது, முன்னால் வந்த சிறிய லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதோடு, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடனும் மோதியுள்ளது.

இவ்விபத்தில் இரண்டு லொறிகளின் சாரதிகள், சிறிய லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் பெண்கள் இருவரும் காயமடைந்து,  இவர்கள் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Wed, 01/22/2020 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை