ஓய்வு குறித்து மாலிங்க கருத்து

இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணத்தில்் இலங்கை அணி நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றால் போதும் நான் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெற்றுவிடுவேன் என லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

கவுஹாத்தியில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற மாலிங்க தனது ஓய்வு குறித்து கூறியதாவது, நான் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.

இப்போது இலங்கை கிரிக்கெட்டுக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

அவர்கள் இப்போது நான் விளையாடியது போதும் என்று கூறினால், டி 20 போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

எனது ஒரே இலக்கு டி20 உலகக் கிண்ணத்தில் தகுதிச் சுற்றில் விளையாடுவதுதான். இலங்கை நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றால், அதற்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறுவதை ஒருபோதும் பொருட்படுத்த மாட்டேன் என்று மாலிங்க கூறினார்.

100 டி20 சர்வதேச போட்டிகளில் அணித்தலைவராக செயல்பட்ட ஒரே பந்து வீச்சாளரான மாலிங்க கடந்த மார்ச் மாதத்தில் எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத்திற்கு பின்னர் ஓய்வு பெறலாம் என்று கூறியிருந்தார், ஆனால் பின்னர் மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாட விருப்பம் தெரிவித்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

அடுத்த டி20 உலகக் கிண்ண போட்டி வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை