பேலியகொடை, 04ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள டயர் கடையொன்றில் திடீரென தீ பரவியுள்ளது.
கண்டி வீதியில் அமைந்துள்ள டயர் கடையொன்றிலேயே நேற்றிரவு (24) தீ பரவியுள்ளது.
பேலியகொடை பொலிஸாரும் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இத்தீ விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை. இது தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Sat, 01/25/2020 - 12:10
from tkn