பெருந்தோட்டத்துறையை அபிவிருத்தி செய்ய தேவையான உதவிகளை அளிப்பேன்

பெருந்தோட்டத்துறையை புத்துருவாக்கம் செய்ய தேவையான உதவிகளை அளிப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன முதலாளிமார் சம்மேளனத்துக்கு உறுதியளித்துள்ளார்.  

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் அரசாங்கம் நேற்றுமுன்தினம் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.  

தேயிலை ஏற்றுமதி எவ்வாறு மந்தமானது மற்றும் அவற்றை உற்பத்தியை புதுப்பிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.

தேயிலை உற்பத்தியை மேம்படுத்த வங்கிகளுடன் கலந்தாலோசித்து ரூ.500 மில்லியன் கடன் வழங்கவும் முடிவுசெய்யப்பட்டது.

Wed, 01/22/2020 - 08:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை