அணு நிலையத்திற்கு அருகில் பூகம்பம்

ஈரான் அணுசக்தி நிலையத்திற்கு அருகில் நேற்று 4.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

பஷ்ஹர் அணுசக்தி நிலையத்திற்கு அருகில் பொரஸ்ஜானின் தென் கிழக்காக 17 கிலோமீற்றர் தூரத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் உயிரிழப்பு அல்லது சேதங்கள் ஏற்படவில்லை என்று ஈரானின் செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இதே பகுதியில் இரு வாரத்திற்கு முன்னர் 5.1 ரிக்டர் அளவில் பூகம்பம் ஒன்று ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த பூகம்பம் இயற்கையான நிகழ்வு ஒன்று என்றும் ஈரானில் நிலவும் பதற்ற சூழலுடன் தொடர்புபட்டதல்ல என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலில் கூறப்பட்டுள்ளது.

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை