கள்ளத் தொடர்பில் குழந்தை: பெல்ஜியம் மன்னர் ஒப்புதல்

டொல்பினே போல் என்ற 51 வயதுப் பெண் தனது கள்ளத் தொடர்பு மூலம் கிடைத்த குழந்தை என்பதை பெல்ஜியம் நாட்டு முன்னாள் மன்னர் இரண்டாவது அல்பேர்ட் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் அவர் கட்டாயப்படுத்தப்பட்டு வழங்கிய டி.என்.ஏ மாதிரி இந்த உண்மையை உறுதிசெய்வதாக இருந்தது.

பெல்ஜியம் கலைஞரான டொல்பினே 85 வயதான மன்னர் தனது தந்தை என்று ஒரு தசாப்தத்திற்கு மோலாக கூறி வந்தார். இந்நிலையில் மோசமான உடல்நிலை காரணமாக 2013 ஆம் ஆண்டு மன்னர் முடிதுறந்த நிலையில் அவர் மீது வழக்குத் தொடர வாய்ப்பு ஏற்பட்டது.

முன்னாள் மன்னர் இந்த உண்மையை ஒப்புக்கொண்டது அவரின் துயர் தீர்ப்பதாக அமையும் என்று போல்லின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் மன்னரின் வழக்கறிஞர்கள் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “அவர் டி.என்.ஏ முடிவை பற்றி தெரிந்துள்ளார். டொல்பினே போல்லின் தந்தை அவர் என்பது விஞ்ஞான முடிவுகள் காட்டுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு வரை தொடரும் சட்ட போராட்டத்தை கைவிட தீர்மானித்திருக்கும் முன்னாள் மன்னர், டொல்பினே போல் தனது நான்காவது குழந்தை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை