பாப்பரசரின் கையை பற்றி இழுத்த பெண்

புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் எதிர்பாரா விதமாக பாப்பரசர் பிரான்சிஸின் கையைப் பற்றி இழுத்த பெண் ஒருவரால் சலசலப்பு ஏற்பட்டது. எனினும் பாப்பரசர் தமது கையை உடனடியாக விடுவித்துக்கொண்டார்.

வத்திக்கான் சிட்டியிலுள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றது.

அங்கு அமைக்கப்பட்ட காட்சி ஒன்றைக் காண நடந்து செல்லும் வழியில் பாப்பரசர் யாத்திரிகர்களுக்குத் தம்முடைய ஆசியைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்.

ஒரு குழந்தையைச் செல்லம் கொஞ்சிவிட்டு அங்கிருந்து திரும்பவிருந்த பாப்பரசரின் கையைப் பெண் திடீரெனப் பற்றி இழுத்தார்.

அதை எதிர்பாராத பாப்பரசர் ஏதோ கூறிப் பெண்ணின் கை மேல் இருமுறை தட்டிவிட்டுத் தம்மைத் தாமே விடுவித்துக்கொண்டதாக ஏ.பீ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Thu, 01/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை