வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் இழுவைப்பாதை திறந்து வைப்பு

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலங்கைத்துறை கிராமத்திலிருந்து இலங்கைத்துறை முகத்துவாரத்திற்கான போக்குவரத்து இழுவைப் பாதை நீண்டகால கோரிக்கைக்குப் பின்னர் நேற்றுமுன்தினம் (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தின் இடர் முகாமைத்துவ பிரிவு, திருகோணமலை ரொட்டரிக் கழகம்,பொதுமக்கள் போன்றோரின் இணைந்த பங்களிப்புடன் சுமார் 11 இலட்சம் ரூபாய் செலவில் இவ்விழுவப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாதையை திறந்து வைக்கும் நிகழ்வில் திருகோணமலை உதவி அரசாங்க அதிபர் என்.பிரதிபன், வெருகல் பிரதேச செயலாளர் கே.குணநாதன், வெருகல் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம், இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை கிளை தலைவர் குகதாஸன், ரொட்டரிக் கழக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தோப்பூர் குறூப் நிருபர்

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை