செனட்டில் அடுத்த வாரம் விசாரணைகள் ஆரம்பம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின் மீதான செனட் சபை விசாரணை இந்த மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தை, விசாரணை இல்லாமலேயே தள்ளுபடி செய்யும் அளவுக்கு ஆளும் குடியரசுக் கட்சிக்கு மேலவையான செனட் சபையில் பலம் உள்ளது.

எனினும், அந்த தீர்மானம் மீதான விசாரணைக்குப் பின்னர் அது தள்ளுபடி செய்யப்படும் என்று குடியரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் முடிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் போட்டிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜோ பைடனின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது மகன் உக்ரைனில் பணியாற்றியது தொடர்பாக அவர்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டுமென்று அந்த நாட்டு அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் டிரம்ப் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுப்பட்டதாகவும், இதுதொடர்பான விசாரணையில் பாராளுமன்றத்துக்கு இடையுூறு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி, அவரை பதவி நீக்கம் செய்வதற்கான இரு தீர்மானங்களை பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சினர் கடந்த மாதம் நிறைவேற்றினர்.

அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது இது 3ஆவது முறையாகும்.

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை