பொதுத் தேர்தல் படுதோல்வியின் பின்னர் ஐ.தே.கவிற்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்க நேரிடுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
எட்டாவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்துபசாரத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், பாராளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை கிடையாது. த,தே.கூ முஸ்லிம் கட்சிகள் எமக்கு எதிராகவே உள்ளன.
பெப்ரவரி 28இன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க வாய்ப்புள்ளது. அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்துவோம். அதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நல்ல முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பதாக ஐ.தே.க கூறினாலும் பின்னால் குழிபறிக்கும் பணியையே அக் கட்சி செய்யும்.
சண்டையிட்டு ஜனாதிபதி வேட்பாளரானான அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பெற்றுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த பின்னர் ஐ.தே.கவிற்கு புதிய தலைவர் ஒருவரை தேட நேரிடும் என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
from tkn