குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் சென்னை, மதுரை மற்றும் கோவையில் மாபெரும் பேரணியை முன்னெடுத்துள்ளனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் கடந்த சில நாட்களாக குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பெண்கள் கோலமிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை, மதுரை மற்றும் கோவையில் இஸ்லாமிய அமைப்பினர் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், சில அரசியல் கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை