மட்டக்களப்பில் திறன் அபிவிருத்தி ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்

அரசாங்க அதிபர்  மாணிக்கம் உதயகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்வாங்கப்பட்ட திறன் அபிவிருத்தி செயற்திட்டதீனூடாக சுற்றுலாத்துறையினையும் கலை கலாசாரத்தையும் மேம்படுத்துவதற்கான திட்டம் அமுல் நடத்தப்படவுள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டு உதவியில் அமுல் நடத்தப்படவுள்ள இந்த விசேட திட்டம் பற்றி ஆராய்வு செய்யும் விசேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நேற்றுமுன்தினம் (06) நடைபெற்றது.

திறன் அபிவிருத்தி செயற்திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிகவும் முக்கியமான அபிவிருத்தி திட்டமாகும்.

சுற்றுலாத்துறையை வளர்க்கவும் மற்றும் சுற்றுலா தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் செயற்திட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது.

சுற்றுலாத்துறையூடாக தொழில் வாய்ப்புக்கள் மற்றும் எமது நாட்டு கலை கலாசாரங்களை வளர்ச்சியடையச் செய்யவும் இளைஞர் யுவதிகளின் திறன் விருத்தி செய்யப்பட்டு தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படவும் நாட்டினுடைய வருமானம் உயர்வடையும் நிலை ஏற்படுமென மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் இங்கு கருத்து தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் புண்ணியமூர்த்தி சசிகலா, சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் திணைக்கள தலைமை உத்தியோகத்தர் எஸ்.வினோத், உள்வாங்கப்பட்ட திறன் அபிவிருத்தி செயற்திட்ட நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் ஜி.மெரினா, திட்டத்தின் ஆலோசகர் பேராசிரியர் சந்திராஸ்ரீ மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Wed, 01/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை