முகக்கவசம் அவசியம் இல்லை; வர்த்தக நோக்கில் சிலர் வதந்திகள்

முகக் கவசம் அணியுமாறு கல்வியமைச்சோ அல்லது சுகாதார அமைச்சோ எந்த நிலையிலும் இதுவரை எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லையென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

முகக் கவசத்துக்கான அவசியம் கிடையாது. அதற்கான தேவையேற்பட்டால் உரிய தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டு அதனை வெளிப்படுத்தும்என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, பாடசாலைகளை மூடவோ விளையாட்டுப் போட்டிகளை நிறுத்தவோ எத்தகைய தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்தன இங்கு தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்:

பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் இதனால் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று முன்தினம் இது தொடர்பில் விரிவான

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 01/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை