புதையல் தோண்டிய ஐவர் கைது

வெலிமடை நெதின்கமுவ பிரதேசத்திலுள்ள போகஹகும்புர  வனப் பகுதில் மிகவும் சூட்சகமான முறையில் புதையல் தோண்டிய கும்பலொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

போகஹகும்புர பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம்   மாலை அப்பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார் ஐவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதன்போது கை,கால் உடைக்கப்பட்ட நிலையில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலை, இரு மண் வெட்டிகள், மயில் இறகுகள், பிக்காசு மற்றும் மந்திரிக்கப்பட்டதாக கூறும் தேங்காய் உள்ளிட்ட பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அதேவேளை பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் குணவர்தனவின் பணிப்புரைக்கமைய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைத்து தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.

ஊவா சுழற்சி நிருபர்

Sat, 01/04/2020 - 10:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை