ஆப்கான் வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தின் எழுவர் பலி

ஆப்கானிஸ்தானின் பல்க் மாகாணத்தில் அரச படை நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் மூன்று சிறுவர்கள் உட்பட குறைந்து ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டிருப்பதோடு அவர்கள் இரவு உணவு எடுத்துக்கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச கட்டுப்பாட்டு பகுதியின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பல்க் மாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பல்க்கில் அரச படை தலிபான்களுக்கு எதிராக வான் மற்றும் தரை வழியாக படை நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 01/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை