ஐக்கிய இராஜியத்துக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பதவி விலகல்

ஐக்கிய இராஜியத்துக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக இருந்த மனிஷா குணசேகர அப்பதவியில் இருந்து வெளியெறிச் செல்கிறார். இந்நிலையில் அவர் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில், பொதுநலவாய ஐக்கிய நாடுகள் மற்றும் தெற்காசியாவுக்கான இராஜாங்க அமைச்சரான தரிக் அஹமதுவுடன் கடந்த ஜனவரி 15 ஆம் திகதி பிரியாவிடை சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

உயர்ஸ்தானிகராக அவர் பதவி வகித்த காலத்தில் இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் உறவுகளை மேம்படுத்த இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமது வழங்கியிருந்த ஆதரவு மற்றும் கூட்டுறவுக்கு தனது, பாராட்டை மனிஷா குணசேகர தெரிவித்தார். இராஜாங்க அமைச்சரும் பதிலுக்கு நன்றி தெரிவித்தார்.

Thu, 01/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை