ரோயல்ஸ் கிரிக்கெட் கழக புதிய சீருடை அறிமுக விழா

புத்தளத்தில் இயங்கி வரும் கடின பந்து கிரிக்கெட் கழகமான ரோயல்ஸ் கிரிக்கெட் கழகத்தின் 2020ஆம் ஆண்டுக்கான அணியின் புதிய சீருடை அறிமுக விழா சனிக்கிழமையன்று (21) புத்தளம் போல்ஸ் வீதியில் அமைந்துள்ள தனியார் உணவகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

புத்தளம் ரோயல்ஸ் கிரிக்கெட் கழகத்தின் புதிய சீருடைக்கான அனுசரணையை ஏ.பீ.எம்.மெட்டல் வேர்க், ரீ ப்ரஷ் மெட்ரோ கேம்பஸ், ஐ.ஸொப்ட் கெம்பஸ், ட்ரீம் பில்டர்ஸ்,எப்.எம்.சப்ளயர்ஸ், றால் சந்தி கெயார் மற்றும் ஏ.டூ செட் புக் ஷொப் ஆகிய நிறுவனங்கள் வழங்கி வைத்தன. புத்தளம் ரோயல்ஸ் கிரிக்கெட் கழகம் 2014 ம் ஆண்டு மென்பந்து கிரிக்கெட் கழகமாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது கடின பந்து கிரிக்கெட் கழகமாக மாற்றம் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக புத்தளம் நகர சபை உறுப்பினர் ஏ.எம். சியான் கலந்து கொண்டார். ரீ ப்ரஷ் மெட்ரோ கேம்பஸ் நிறுவன உரிமையாளர் எஸ்.எல். றிஸ்வான், ஐ.ஸொப்ட் கெம்பஸ் நிறுவன உரிமையாளர் ஏ.கே.எம். அப்ராஸ், றால் சந்தி கெயார் உரிமையாளர் எம்.எஸ்.எம். நஸ்மீர் மற்றும் புத்தளம் ரோயல்ஸ் கிரிக்கெட் கழக உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

புத்தளம் தினகரன் நிருபர்

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை