கலாநிதி ஜயம்பதி எம்.பி பதவியிலிருந்து இராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண ஜனவரி 20ஆம் திகதி முதல் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க நேற்று சபையில் அறிவித்தார்.

ஜயம்பதி விக்ரமரட்ணவின் இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் சமர்ப்பித்தார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு செயலாளர் நாயகம் உள்ளிட்ட  பாராளுமன்ற பணியாட் தொகுதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அக்கடிதத்தில் ஜயம்பதி விக்ரமரட்ண குறிப்பிட்டுள்ளார்.

 

Thu, 01/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை