இ.போ.ச பஸ் 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து; 22 பேர் காயம்

தெல்தெனியவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று பாதையை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 22 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தெல்தெனிய டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸே லுல்வத்தையிலிருந்து தெல்தெனிய நோக்கிச் செல்லும்போது இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. (படம்: அசேல குருலுவன்ச)

Thu, 01/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை