அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்: ஆஷ்லே பார்டி, ஒசாகா 3-வது சுற்றுக்கு தகுதி

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லேவும் ஜப்பானை சேர்ந்த ஒசாகாவும் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கிராண்ட்சலம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் முதல் நிலை வீராங்கனையும், கடந்த ஆண்டு பிரெஞ்சு பகிரங்க பட்டத்தை வென்றவருமான ஆஷ்லே (அவுஸ்திரேலியா) 2-வது சுற்றில் சுலோவெனியாவை சேர்ந்த ஹெர்சாக்கை எதிர் கொண்டார்.

இதில் ஆஷ்பார்டி 6-–1, 6-–4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

3-வது வரிசையில் இருப்பவரும் நடப்பு சம்பியனுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 2-வது சுற்றில் சீனாவை சேர்ந்த ஜெங்கை எதிர் கொண்டார். இதில் ஒசாகா 6-–2, 6-–4 என்ற செட் கணக்கில் வென்றார்.

உலகின் 8-வது வரிசையில் உள்ள பெட்ரோ சிவிட்டோவா (செக்குடியரசு) 7-–5, 7-–5 என்ற செட் கணக்கில் ஸ்பெயினை சேர்ந்த படோசவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில் பெட்ரா மேட்ரிக் (குரோஷியா), வோஸ்னியாக்சி (டென்மார்க்) கெனின் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

உலகின் 6-ம் நிலை வீரரான ஸ்டெபான்ஸ் சிட்சி பாஸ் (கிரீஸ்) 2-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த பிலிப்பை சந்திக்க இருந்தார். பிலிப் காயத்தால் விலகியதால் சிட்சிபாஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சாம்குயரி (அமெரிக்கா) 7-–6 (7-–2), 4-–6, 6-–4, 6-–4 என்ற கணக்கில் பெர்னாசிசை (லிதுவேனியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Thu, 01/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை