அமெரிக்க விமானத் தளம் ஒன்றில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பயிற்சிபெற்று வந்த சவூதி அரேபிய இராணுவ வீரர்கள் 21 பேர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய 21 வயது சவூதி விமானப் படை லெப்டினன்ட் உடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படவில்லை. ஆனால் ஜிஹாத் தொடர்பான பொருட்கள் மற்றும் சிறுவர்களை ஒழுக்கக் கேடாக வைத்திருக்கும் புகைப்படங்கள் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதை அடுத்தே வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க சட்டமா அதிபர் வில்லியன் பார் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டு மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை அடுத்து சவூதி இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சிகள் நிறுத்திவைக்கப்பட்டன.
from tkn