மகளிருக்கான ரி/20 உலகக் கிண்ண அணி அறிவிப்பு

பெப்ரவரி மாத இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மகளிருக்கான ரி/20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவியாக சிரேஷ்ட துடுப்பாட்ட வீராங்கனையான ஷமரி அத்தபத்து தெரிவாகியுள்ளார். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த வீரராகத் திகழும் அத்தபத்து இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய பிராந்திய அணிகளில் விளையாடிவரும் சிறந்த துடுப்பாட்ட விராங்கனையாவார்.

மேலும் மகளிர் உலகக் கிண்ண அணிக்கு 20 வயது இளம் வீராங்கனை சத்யா சங்தீபனியையும் இணைத்துக் கொண்டுள்ளனர். ரத்கம தேவபதிராஜ வித்தியாலயத்திலிருந்து அண்மைக் காலமாக சகலதுறை வீராங்கனையாக மிளிர்ந்து வரும் சங்தீபனி அண்மையில் முடிவுற்ற ஆசியக் கிண்ண இளையோர் அணி சார்பாக சிறப்பாகச் செயற்பட்டு அத் தொடரில் இலங்கை இளையோர் அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய பங்களித்ததால் இம்முறை மகளிர் உலகக் கிண்ணத்துக்கான அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் பங்குகொள்ளும் இலங்கை அணி விபரம் வருமாறு:

ஷமரி அத்தபத்து (தலைவர்) ஹர்சிதா மாதவி, அனுஷ்கா சங்ஜீவனி, ஹங்சிமா கருணாரத்ன, சசிகலா சிறிவர்தன, நிலக்ஷி த சில்வா, அமா காஞ்சனா, கவிஷா தில்ஹாரி, உதேஷிகா, பிரபோதனி, அசினி குலசூரிய, ஹசினி பெரேரா, சத்யா சங்தீபனி, உமேஷா திமேஷனி, சுகந்திகா குமாரி, நிலானி மனோதரா.

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை