ரஷ்ய வான் தாக்குதலில் சிரியாவில் 10 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு இத்லிப் பிராந்தியத்தில் பேக்கரி மற்றும் மருத்துவ நிலையங்களுக்கு அருகில் சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யா நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இத்லிப் மாகாணத்தின் அரிஹா நகரில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் குறைந்து ஐந்து பெண்கள் உள்ளனர். இங்கு சிரிய அரச படை உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதலை அடுத்து அல் ஷமி மருத்துவ நிலையத்தில் இருந்து உடலெங்கும் தூசி மூடிய நிலையில் மருத்துவர்கள் கூச்சலிட்டபடி வெளியே ஒட்டம்பிடித்தனர். அந்த மருத்து நிலையமும் சோதமடைந்துள்ளதாக அங்கிருக்கும் ஏ.எப்.பி செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அருகில் இருந்த மூன்று கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய வான் தாக்குதல்களில் உயிரிழந்த பொது மக்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை