பாராளுமன்றம் பெப்ரவரி 05ம் திகதி மீண்டும் கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதிவரை மீண்டும் கூடுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் நடைபெறவிருப்பதுடன், பெப்ரவரி 06ஆம் திகதி முற்பகல் 10.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரையும், பெப்ரவரி 07ஆம் திகதி முற்பகல் 10.30 மணிமுதல் பிற்பகல் 4.30 மணிவரையும் சபை அமர்வுகள் நடைபெறவுள்ளன.

Sat, 01/25/2020 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை