எதிர்க்கட்சித் தலைவர் யார்

ஐ.தே.க தலைவர் நாளை  உத்தியோகபூர்வ அறிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை ஐ.தே.க தலை வர் ரணில் விக்கிரமசிங்க நாளை(5) உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாக ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆராய்வதற்காக ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று நடைபெற இருந்தது. எனினும் பாரளுமன்ற அமர்வு இன்று நடைபெறா நிலையில் இக்கூட்டம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் கட்சி எடுத்த முடிவு மற்றும் ஐ.தே.முன்னணி தலைவர்கள் தெரிவித்த யோசனைகளுக்கு அமைவாக எடுக்கப்பட்ட இறுதி முடிவு நாளைய ஐ.தே.க

 பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாஸவுடனும் பேச்சு நடத்தப்பட்டதாகவும் அவரும் கட்சியின் முடிவுக்கு உடன்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார். இதே வேளை கட்சிக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தினால் கட்சி பின்வரிசை எம்.பிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காணப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Tue, 12/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை