மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு நிவாரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களிடையே சகவாழ்வை கட்டியெழுப்பும் வகையில் முஸ்லிம் பள்ளிவாசலினால் வெள்ளத்தினால் பாதிக்கபட்டுள்ள தமிழ் குடும்பங்களுக்கு நிவாரண வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நாவக்குடா கிழக்கு விவேகானந்தபுரம் கிராம சேவை பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உலர்வுணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாவக்குடா கிழக்கு விவேகானந்தபுரம் கிராம சேவை பிரிவிலுள்ள குடும்பங்களுக்கான உலர்வுணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மட்டக்களப்பு நகர், இஸ்லாமிய வர்த்தக சங்கம், சலாமா விளையாட்டு கழகம் என்பன இணைந்து மட்டக்களப்பு ஜாமி உஸ் ஸலாம் ஜும் ஆ பள்ளிவாசலினால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உலர்வுணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

 

---மட்டக்களப்பு குறூப் நிருபர்

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை