இலவச மின்சாரம், குடிநீர் இணைப்புகளுக்கு பற்றுச்சீட்டு

கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிபின் ஏற்பாட்டில் வருமானம் குறைந்த மக்களுக்கான இலவச மின்சாரம், குடிநீர் இணைப்புக்களுக்கான பணம் செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

மீராசாஹிப் மகளிர் நலன்புரி அமைப்பின் ஒருங்கினைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்தோடு அவரது தாயாரும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களும், 65 குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளும், வழங்கி வைக்கப்பட்டன.

இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்காக 65 குடும்பங்களுக்கு சுமார் 13 இலட்சம் ரூபாய் நிதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஒதுக்கிடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புக்களுக்கான பணம் செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டுக்களை சிராஸ் மீராசாஹிப் மற்றும் அவரது தாயார் ஆகியோரினால் வழங்கிவைக்கப்பட்டது.

(அட்டாளைச்சேனை விசேட நிருபர்)

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை