சாவகச்சேரி வர்த்தக நிலையத்தில் தீ; இரண்டு கோடி ரூபா பொருட்கள் நாசம்

சாவகச்சேரியில் வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்தினால் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின் சாவகச்சேரிச் சந்தியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக நேற்று முன்தினம் இரவு இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த வர்த்தக நிலையம் முற்றாக தீயில் எரிந்ததுடன் அதனருகில் இருந்த வர்த்தக நிலையங்களுக்கும் தீ பரவியுள்ளது.

இதனையடுத்து அங்குள்ள வர்த்தகர்களும் பொதுமக்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் சம்பவ இடத்திற்குச் சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும் குறித்த வர்த்தக நிலையத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறை விசேட நிருபர்

Sat, 12/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை