கட்டாரில் கழக உலக கிண்ண போட்டிகள்

கட்டாரில் 2022 ஆம் ஆண்டு இடம்பெறும் உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிக்கு முன்னதாக ஐரோப்பாவின் முன்னணி கழகமான லிவர்பூல் மற்றும் அமெரிக்காவின் முன்னணி கழகமான பிளமிங்கோ அணிகள் மோதும் கழகங்களுக்கு இடையிலான உலக கிண்ண போட்டி எதிர்வரும் 21ம் திகதி கட்டார் கலிபா சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.அத்துடன் 2020 ம் ஆண்டு கழகங்களுக்கு இடையிலான உலக கிண்ண போட்டியும் கட்டாரில் இடம்பெறவுள்ளது.

மத்திய கிழக்கு காலநிலைக்கு ஏற்றாற் போல் அல்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்ற வகையில் இந்த மைதானங்களை கட்டார் அமைத்து அதில் முதல் தடவையாக உலக கிண்ண போட்டியை நடத்தவுள்ளது.அத்துடன் வெளிநாட்டு இரசிகர்களின் பங்கேற்புடன் நடைபெறும் போட்டி என்பதால் இது உலக கிண்ண பரிச்சாத்த போட்டியாகவும் எடுத்துக் கொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும்.

கட்டாரில் எதிர்வரும் 2022ம் ஆண்டு உலக கிண்ண இறுதிப் போட்டி நவம்பர் -டிசம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் ஹோட்டலில் மதுபாவனைக்கு தடைவித்துள்ள நிலையில் பீயர் பாவனைக்கு தடையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது இரசிகர்கள் கூடும் இடத்தில் மட்டும் பாவனைக்கு எடுத்து கொள்ள முடியும். மைதானத்தில் உள்ளே தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Thu, 12/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை