ரஷ்யா - சீனாவுக்கு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டம்

ரஷ்யா - சீனாவுக்கிடையே இயற்கை எரிவாயு விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குழாயூடாக இந்த விநியோகம் இடம்பெறும். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் ஆகியோர் இணைந்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

400 பில்லியன் டொலர் செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த குழாய், சைபீரிய எரிவாயு வயலை வடகிழக்கு சீனாவில் உள்ள ஒரு நகரத்துடன் இணைக்கிறது. சீனாவின் தேசிய பெற்றோலியம் கோர்ப் நிறுவனம், ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் என்பன கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் பின்னர், குழாயின் ஆரம்ப கட்டம் வெறும் ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்டு தற்போது திறந்தும் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் கூறுகையில், ‘சீனாவும் ரஷ்யாவும் தேசிய வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளன. இந்த ஒப்பந்தத்தால் இரு தரப்பு உறவுகளும் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைவதாகவும் குறிப்பிட்டார்.

Thu, 12/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை