மக்கள் வங்கியின் தலைவராக சுஜீவ ராஜபக்‌ஷ

பட்டயக் கணக்காளரான சுஜீவ ராஜபக்‌ஷ மக்கள் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.   கணக்காய்வு மற்றும் ஆலோசனை சேவைகளில் 30ஆண்டு கால அனுபவமுள்ள இவர் பொது வர்த்தகம், தைத்த ஆடைகள், காணி, உல்லாச சேவைகள், பெருந்தோட்டம், நிதி, வங்கி என்ற பல துறைகளில் வியாபார ஆலோசனை சேவைகள் வழங்குவதில் விற்பன்னர் ஆவார்.   இலங்கை பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் அங்கத்தவரான இவர், வியாபார நிர்வாகம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டம் பெற்றவர்.   இலங்கை பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரான இவர், இலங்கை மத்திய வங்கியின் நிதிக் கொள்கை ஆலோசனை கமிட்டியிலும் இலங்கை கடனீட்டு ஆவணங்கள் மற்றும் பரிமாற்ற ஆணைக்குழுவின் அங்கத்தவருமாவார். அத்துடன் பல நிறுவனங்களில் அவர் பணிப்பாளராக இருந்துள்ளார்.   

Sat, 12/28/2019 - 09:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை