வெலிக்கடை தப்பியோடிய கைதி மீது சூடு தொடர்பில் விசாரணை

வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு திருட்டு சம்பவம்தொடர்பில் விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த 20 வயதான அத்திடிய பகுதி இளைஞரே இவ்வாறு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாக அறிய வருகிறது.  

விளக்கமறியலில் வைக்கப்படும் கைதிகள் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்படுவதோடு காலைவேளையில் அவர்களின்  சி றைக்கூடங்களிலிருந்து அழைத்து வரப்பட்டு பொது இடத்தில் விடப்படுவதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அவர்கள் மாலை 5 மணிக்கு மீண்டும் சிறைக்கூடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.சம்பவ தினமான நேற்று முன்தினம் மாலை சிறை அதிகாரிகள் கைதிகள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கிட்ட போது ஒருவர் குறைவாக இருந்துள்ளார்.இது தொடர்பில் ஆராய்ந்த போது ஒருவர் மறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.அதிகாரிகளை கண்ட கைதி தப்பி ஓட முற்பட்டுள்ளதோடு அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.இதன் போது கைதியும் அவரை பிடிப்பதற்காக பின்னால் ஓடிச் சென்ற சிறை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளனர்.இருவரும் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. 

Thu, 12/26/2019 - 12:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை