க.பொ.த (உ/த) பெறுபேறுகள் இன்று

2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இன்று வெள்ளிக்கிழமை வெளியிடக்கூடியதாக இருக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். 

இன்று மாலை பரீட்சை திணைக்களத்தின் இணைய தளத்தினூடாக பெறுபேறுகளை பார்க்கமுடியுமென்றும் அவர் தெரிவித்தார். 

பெரும்பாலும் திங்களன்று சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் ஆரம்பமாகவுள்ளது. நாடு பூராகவுமுள்ள 82நிலையங்களில் இது இடம்பெறவுள்ளது.

மதிப்பீட்டு பணிகளில் 28 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளனர். விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இதில் எட்டாயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.

Fri, 12/27/2019 - 09:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை