ஆணழகன் போட்டி உதய இறுதிப் போட்டிக்குள்

ஆணழகன் போட்டியில் தற்போது இலங்கையில் நடைபெறும் மாபெரும் போட்டி ‘மிஸ்டர் ஸ்ரீலங்கா” போட்டியாகும். 90 கிலோகிராம் பிரிவில் இறுதி சுற்றில் 5 போட்டியாளர்களில் ஒருவராக லேக்ஹவுஸ் நிறுவன கணக்காளர் பிரிவில் பணியாற்றும் எல்.பீ.ஐ. உதயவும் ஒருவராவார்.

‘மிஸ்டர் ஸ்ரீலங்கா” போட்டியில் சரித்திரத்திலேயே லேக்ஹவுஸ் விளையாட்டு கழகத்துக்கு முதற் தடவையாக இவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இப்போட்டியின் ஆரம்பச் சுற்று வத்தளை நகர சபை மண்டபத்திலும் இறுதிப் போட்டி வெலிசறை நவலோக்க மைதானத்தில் நடைபெற்றதோடு பிரபல, கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

வத்தளை ரந்தீர் ரொத்ரிகோ மன்றத்தின் தலைவரும் முன்னாள் மேற்கு மாகாண சபை உறுப்பினருமான ரொதிரிகோவின் அனுசரணையின் கீழ் நடைபெற்றது.

‘தங்கபதக்கம் பெற்ற உலக ஆணழகன் பிரசன்ன பீரிஸினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட போட்டி சரித்திரத்திலேயே திறந்த வெளி அரங்கில் நடத்தப்பட்ட முதலாவது “மிஸ்டர் ஸ்ரீலங்கா” போட்டி என்பது விசேட அம்சமாகும்.

Sat, 12/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை