ஐக்கிய தேசியக் கட்சியுடன் பதவிகளை பகிர்ந்துகொள்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல

ஐக்கிய தேசியக் கட்சியுடன் பதவிகளை பகிர்ந்துகொள்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்-ஷவின் கொள்கைகளை வலுப்படுத்துவது தவிர ஐக்கிய தேசியக் கட்சியுடன் பதவிகளை பகிர்ந்து கொள்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதவிகளை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் ஐக்கிய தேசியக் கட்சிக்கே இருந்ததாக குறிப்பிட்ட அவர், அதற்கமையவே அவர்கள் அரசியல் யாப்பை திருத்தியமைத்ததாகவும் அவர் தெரிவித்தார். பொதுஜன முன்னணியில் பதவிகளை பகிர்ந்துகொள்வதில் போட்டி இல்லை எனவும் ஐ.தே.கவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியாது அவர்கள் அரசாங்கத்தின் நெருக்கடி நிலைமையை முன்னிலைப்படுத்தி செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். (ஸ)

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை