இன்றும் நாளையும் மழை அதிகரிக்கும்

இன்றும் நாளையும் மழை அதிகரிக்கும்-Weather Forecast-Rain-Increase-Today-Tomorrow

அநுராதபும், பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியாவில் பலத்த மழை எதிர்பார்ப்பு

நாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றும் (22) நாளயும் (23) மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா மாவட்டங்களில் சில இடங்களில் 150-200 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, மாத்தளை, புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும்சில இடங்களில் 100 -150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்திலும் கண்டி, குருநாகல், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும்சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Sun, 12/22/2019 - 13:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை