ஓமல்பே சோபித்த தேரர்
டயஸ்போராவுக்கு கூஜாத் தூக்கும் பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கை உடனடியாக விலக வேண்டும் என எம்பிலிப்பிட்டிய ஓம ல்பே சோபித தேரர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக மீண்டும் வெற்றி பெற்ற பொரிஸ் ஜோன்சன் தனது தேர்தல் வெற்றியின் பின் புலிகளின் அபிலாஷைகளை தூண்டும் விதத்தில் உரையாற்றியுள்ளார்.
இதன் மூலம் அவர் புலிகளுடன் உள்ள தொடர்பு வெளிப்படையாகத் தெரிகின்றது.
பொதுநலவாய அமைப்பு இன்று வலுவிழந்த நிலைமையில் இருக்கிறது.அதனால் இதற்கு உயிர் கொடுக்கவே இவர் முயல்கிறார். இலங்கையை இவர் இன்னும் தனது காலனித்துவ அடிமை நாடாக
நினைக்கிறார் போல.அவ்வாறு அவர் நினைப்பதாக இருந்தால் அது பெரும் தவறு. காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற எம்மை அவர் தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருப்பதற்கு முயற்சி செய்வதாகவும் தெரிகிறது.
எனவே எமக்கு பொதுநலவாய அமைப்பின் தொடர்புகள் இனித்
தேவையில்லை. அதிலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்
from tkn