கிறிஸ்மஸ் தினத்தில் மதுபானம் விற்றவர் கைது

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரவப்பொத்தனை வீதியில் நத்தார் பண்டிகை தினத்தில் அரச மதுபானத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நத்தார் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் நாடு பூராகவும் மதுபானசாலைகள் மூடப்படும் எனவும் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரித் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், வவுனியா பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த வர்த்தக நிலையம் ஒன்றின் பின்பகுதியை மது மற்றும் போதைப்பொருள் நிவாரணப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது 180 மில்லி லீட்டர் கொள்ளளவு உடைய 38 அரச மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன், 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவரையும் வவுனியா பொலிஸார் கைது செய்தனர். சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வவுனியா விசேட நிருபர்


வவுனியா விசேட நிருபர்
Fri, 12/27/2019 - 11:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை