வெளிநாட்டுப் பிரஜை கண்டியில் மரணம்

கண்டி ஹீரஸ்கலவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அவுஸ்திரேலிய நாட்டவர் குறித்த ஹோட்டலின்  இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளமை  குறித்து,  கண்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பீட்டர் கெனன் என்ற 75 வயதுடைய  நபர்  ஒருவரே இவ்வாறு மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்திருப்பதாக விசாரணைகளிலிருந்து தெரிவருகின்றன.

நேற்று (07) அதிகாலை 2.00 மணியளவில் ஹோட்டலின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்த இந்நபர் மிகவும் ஆபத்தான நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதெனவும் அது தொடர்பான அறிக்கைகளைப் பெற்ற பின்னரே மரணத்திற்கான சரியான காரணத்தைக் கூற முடியும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எம்.ஏ.அமீனுல்லா 

Sun, 12/08/2019 - 15:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை