மண்சரிவு

சுற்றுலா விடுதி இடிந்து விழுந்து ஆஸி.பிரஜைகள் மூவர் காயம்

பதுளை -எல்ல பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்று இடிந்து விழுந்ததில் அதில் தங்கியிருந்த 3 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தெம்மோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த 3 பேரும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இடிந்து விழுந்த கட்டடம் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து கட்டட ஆராய்ச்சி பணிமனையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று அங்கு செல்லவுள்ளது. இக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் உரிய முறையில் இடம்பெற்றிருக்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ மையம் சந்தேகம் வெளியிட்டிருக்கிறது.

பண்டாரவளை, தியத்தலாவ ரயில் நிலையங்களுக்கிடையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், ரயில் பாதையை சீர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை