விடுதலை பெற்றபின் மற்றொரு கொலை செய்த கொலையாளி

தாய்லாந்தில் நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்ட தொடர் கொலையாளி ஒருவரை மற்றொரு கொலை தொடர்பில் பொலிஸார் தேடி வருகின்றனர்.

ஐந்து பெண்களை கொன்ற குற்றச்சாட்டில் சொம்கிட் பம்புவங் என்ற அந்த தொடர் கொலையாளி மீது 2005 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் சிறந்த நன்னடத்தை காரணமாக 55 வயதான அந்த கொலையாளி கடந்த மே மாதம் விடுவிக்கப்பட்டதாக தாய்லாந்து திருத்தங்கள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழு மாதங்கள் கழிந்த நிலையில் வடகிழக்கு தாய்லாந்தில் 51 வயது ஹோட்டல் ஊழியர் ஒருவரை கொலை செய்தது குறித்து அவரை மீண்டும் கைது செய்வதற்காக பொலிஸார் தேடி வருகின்றனர்.

அந்த தொடர் கொலையாளியைத் தேடி நாடெங்கும் உள்ள பொலிஸ் நிலையங்களும் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவரின் தலைக்கு 50,000 பாஹ்ட் நாணயங்கள் நன்கொடையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Wed, 12/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை