களுவாஞ்சிக்குடி தபால் நிலையத்திற்குள் வெள்ளநீர்

களுவாஞ்சிகுடி பிரதான தபால் நிலையத்திற்குள் வெள்ளநீர் தேங்கிநிற்பதினால் தாபல் ஊழியர்கள் தங்களது கடமையினை செய்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.

களுவாஞ்சிகுடி தபால் நிலையத்தில் 20 ஊழியர்கள் கடமைபுரிகின்றனர்.

இந்நிலையில் வெள்ளநீரை கடந்தே அலுவலகத்திற்குள் செல்கின்றனர். பிரதேசத்தில் மழை தொடர்ந்தால் அலுவலகத்திற்குள் வெள்ளநீர் உட்புகுந்துவிடும். அபாயமுள்ளது இதனையடுத்து மக்களின் அனைத்து ஆவணங்களும் உயரமான இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்ட்டுள்ளது.

தபால் நிலையத்திற்குள் தேங்கிநிற்கும் வெள்ளநீரை வெளியேற்ற உதவுமாறு மண்முளைன தென் எருவில் பற்று பிரதேச சபையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை