மட்டக்களப்பு வேற்றுச்சேனை கிராமத்துக்கு அரச அதிபர் அதிகாரிகள் சகிதம் விஜயம்

நஷ்டஈடு வழங்குமாறு மக்கள் அரச அதிபரிடம் கோரிக்ைக

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வேற்றுச்சேனை விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தருமாறு மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் உள்ள வேற்றுச்சேனை கிராமத்துக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் விஜயமொன்றை மேற்கொண்டார்.

வெள்ள அனர்த்தத்தை பார்வையிடுவதற்காக அவருடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம்.சியாத் மற்றும் அதிகாரிகள் குழுவினரும் நேற்று சென்றிருந்தனர்.

வேற்றுச்சேனை கிராமம் மிகவும் வெள்ளப்பாதிப்பினை எதிர்கொண்ட பிரதேசமாகையால் அங்கு வயல் நிலங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கப்பட்டதையும், அப்பிரதேசத்தில் வாழ்கின்ற பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை அரச அதிபரிடம் எடுத்துரைத்தார்கள்.

இக்கிராமத்தில் 346 ஏக்கர் வயல் நிலங்கள் சீரற்ற காலநிலையினால் அழிவுற்றுக் காணப்படுவதையும், அங்கு செய்யப்பட்ட சேனைப் பயிர்செய்கைகளும் அழிவடைந்த நிலையில் காணப்பட்டன.

இக்கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்களின் பிரதான தொழிலான விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகிய 2 பிரதான தொழில்களுமே அதிகமாய் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் பாதிக்கப்பட்ட விவசாய கால்நடை பண்ணையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மக்கள் அரச அதிபரை கோரியிருந்தனர்.

வெல்லாவெளி தினகரன், பெரியபோரதீவு தினகரன் நிருபர்-கள்

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை