மட்டு.மாவட்ட டெங்கு அற்ற பாடசாலை; செட்டிபாளையம் மகா வித்தியாலயம் முதலாமிடம்

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்  
 

மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற டெங்கு அற்ற பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியில் புத்தாக்கம் எனும் பகுதியின் கீழ் முதலாமிடத்தினை செட்டிபாளையம் மகா வித்தியாலயமும், இரண்டாமிடத்தினை காத்தான்குடி ஸாவியா மகளிர் மகா வித்தியாலயமும் மூன்றாமிடத்தினை மகிழடித்தீவு மகா வித்தியாலயமும் பெற்றுக் கொண்டன.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் (19) வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த வைபவத்தில் பிராந்திய தொற்றுநோய் வைத்திய நிபுணர் எம்.குணசேகரம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நவலோஜிதன் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார அலுவலகப் பிரிவுகளில் இருந்தும் பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பணப்பரிசில்கள், சான்றிதழ்கள் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தப் பாடசாலைகள் அமைந்துள்ள பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் சான்றிதழ்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

 

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை