க.பொ.த. சா/தர மாணவர்களின் பிரியாவிடை

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் இவ்வருடம் கல்வி பொதுத்தர சாதரணப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு அண்மையில் பாடசாலை அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் பாடசாலையின் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் முறையீட்டு உயர் நீதிபதி திலீப் நவாஸ் மற்றும் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலிக், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ.ரகுமான் பதில் நீதிபதி சட்டத்தரணி ஏ.எம்.நசீல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அதிதிகளால் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

(சாய்ந்தமருது தினகரன் நிருபர்)

Mon, 12/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை