நெடுந்தீவில் மர்மப்படகு; இந்தியாவிலிருந்து வந்ததாக சந்தேகம்

படகில் வந்த நால்வரையும் பிடிக்க  முப்படைகளும் சல்லடைத்தேடுதல்

சுப்பிரமணியம் நிஷாந்தன், பருத்தித்துறை விசேட நிருபர்

இந்தியாவிலிருந்த வருகை தந்த சந்தேகத்திற்கிடமான படகொன்று நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த படகில் வருகைதந்துள்ள நான்கு பேர் இலங்கையினுள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.

அத்துடன், அவர்கள் எங்கு சென்றுள்ளனரென்பது தொடர்பில் தீவிர புலன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்திலிருந்து நான்கு அகதிகள் டோலர் படகொன்றின் மூலம் இலங்கைக்கு தப்பிச்சென்றுள்ளதாக இந்திய ஊடகங்களில் நேற்றுமுன்தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.

நெடுந்தீவில் மர்மப்படகு...

இதுதொடர்பில் அவரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது, யாழ்.நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான படகொன்றை கடற்படை மீட்டுள்ளது. குறித்த படகில் இந்தியாவிலிருந்து நான்கு பேர் வந்துள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. என்றாலும், அவர்கள் யாரென இதுவரை கண்டறியப்படவில்லை.

அவர்கள் தொடர்பில் தீவிர புலன் விசாரணைகளை கடற்படை நடத்திவருகிறது. விரைவில் குறித்த சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறிந்து தெரியப்படுத்துவோம். அதேபோன்று இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்றுமுன்தினம் நெடுந்தீவு பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகில் வந்து இறங்கியவர்கள் காணாமல் போனமை தொடர்பாக அப்பகுதியில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனையிடப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அந்தப் படகில் நான்கு பேர் வந்திறங்கியுள்ளனர் என புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

எனினும் அவ்வாறு வந்து இறங்கியவர்கள் யார்?எங்கிருந்து வந்தனர் என இன்று வரை பாதுகாப்பு தரப்பினரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

யாழ்ப்பாணத்தில் இருந்து தனித் தீவாக அமைந்துள்ள நெடுந்தீவில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் யாழில் இருந்து நெடுந்தீவு செல்வோர் மற்றும் அங்கிருந்து யாழ்ப்பாணம் வருவோர் தொடர்பில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிப்பவர்கள் இறங்கு துறையில் வைத்து அவரது விபரங்கள் பதியப்பட்டு அடையாள அட்டை மூலம் உறுதிப் படுத்தப்பட்ட பின்னரே கடற்படையினரால் அனுமதிக்கப்படுகின்றனர்.மேலும் நெடுந்தீவில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் வீடுகளில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மர்மப் படகில் வந்தவர்கள் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளா அல்லது பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்களா? அல்லது கடத்தல்காரர்களா? என பல கோணங்களில் முப்படையினரும் விசாரணையில் களமிறங்கியுள்ளனர். அவ்வாறு படகில் வந்து இறங்கியவர்களில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பில் அவரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது, யாழ்.நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான படகொன்றை கடற்படை மீட்டுள்ளது. குறித்த படகில் இந்தியாவிலிருந்து நான்கு பேர் வந்துள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. என்றாலும், அவர்கள் யாரென இதுவரை கண்டறியப்படவில்லை.

அவர்கள் தொடர்பில் தீவிர புலன் விசாரணைகளை கடற்படை நடத்திவருகிறது. விரைவில் குறித்த சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறிந்து தெரியப்படுத்துவோம். அதேபோன்று இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்றுமுன்தினம் நெடுந்தீவு பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகில் வந்து இறங்கியவர்கள் காணாமல் போனமை தொடர்பாக அப்பகுதியில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனையிடப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அந்தப் படகில் நான்கு பேர் வந்திறங்கியுள்ளனர் என புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

எனினும் அவ்வாறு வந்து இறங்கியவர்கள் யார்?எங்கிருந்து வந்தனர் என இன்று வரை பாதுகாப்பு தரப்பினரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

யாழ்ப்பாணத்தில் இருந்து தனித் தீவாக அமைந்துள்ள நெடுந்தீவில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் யாழில் இருந்து நெடுந்தீவு செல்வோர் மற்றும் அங்கிருந்து யாழ்ப்பாணம் வருவோர் தொடர்பில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிப்பவர்கள் இறங்கு துறையில் வைத்து அவரது விபரங்கள் பதியப்பட்டு அடையாள அட்டை மூலம் உறுதிப் படுத்தப்பட்ட பின்னரே கடற்படையினரால் அனுமதிக்கப்படுகின்றனர்.மேலும் நெடுந்தீவில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் வீடுகளில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மர்மப் படகில் வந்தவர்கள் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளா அல்லது பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்களா? அல்லது கடத்தல்காரர்களா? என பல கோணங்களில் முப்படையினரும் விசாரணையில் களமிறங்கியுள்ளனர். அவ்வாறு படகில் வந்து இறங்கியவர்களில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

 

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை