ஊடகவியலாளர் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படவில்லை

ஊடகவியலாளர்கள் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டதாக கூறும் எந்தவொரு சம்பவமும் கடந்த ஒரு மாத காலத்தில் அறிவிக்கப்படவில்லை என்று தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வலியுறுத்திக் கூறியுள்ளார்.  

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் 13 ஊடகவியலாளர்கள் பல்வேறு இம்சைக்களுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படுவது அரசாங்கத்துக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பதை இராஜாங்க அமைச்சர் மறுத்துள்ளார்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அப்படியான எந்தவொரு சம்பவமும் இடம்பெற்றிருந்தால் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று கூறிய இராஜாங்க அமைச்சர், அரசாங்கத்தை கஷ்டத்தில் போடும் நோக்கத்துடன் பல்வேறு பிரிவினர் இவ்வாறான வதந்திகளை பரப்பி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.  

Thu, 12/19/2019 - 11:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை