அறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் அபித் அலி

இலங்கைக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் அபித் அலி உலக சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர் அபித் அலி. 32 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

அதன்பின் ராவல்பிண்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். வெற்றி -தோல்வியின்றி முடிந்த இந்த டெஸ்டின் கடைசி நாளில் அபித் அலி சதம் அடித்தார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் போட்டியிலும், டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் போட்டியிலும் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை